தன்னை அறியும் அறிவு, மெய்ப்பொருள் அறிவு இவைகள் பற்றி கசடறத் தெரிந்து கொள்ளும் அறிவே, பேரறிவாற்றல் என்று வேதம் உரைக்கிறது. இந்த இரண்டு அறிவாற்றல் இருந்தாலே பேரறிவாக மாறி விடும். இந்த அறிவு பெறாமல் வேறு எந்த அறிவைத் தேடிப் பெற்றாலும் அதனால் ஒரு பயனும் இல்லை என்கிறார் - திருமூலர்.