ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்கள் திட்டமிட்டு 21-ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறார்கள் என்பதையும், நம் நாட்டிலோ திட்டமிட்டு உழைத்து மக்கள் முன்னேறவில்லை, நாட்டையும் முன்னேற்றவில்லை என்பதையும் டாக்டர் உதயமூர்த்தி தெளிவாக எடுத்துரைக்காறார். நம் நாட்டு மக்கள் பேச்சில் இன்பங் காண்கிறார்களே தவிர செயலாக்கத்தில் இறங்குவதில்லை என்பதைச் சுட்டிக் காண்பிக்காறார். எந்த நேரமும் மக்கள் செயல், செயல் என்று துடிப்போடு செயல்பட வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும்; சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.