குழப்பத்தின் இருட்டுகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நூல். இந்த நூலிலுள்ள கட்டுரைகள் மனதுக்குத் தன்னம்பிக்கையும், தெளிவும், சரியான வழிகாட்டுதலும் வழங்குகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த நூலுக்கும் ஒரு நிச்சய இடம் உண்டு.
நமது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும். உதாரணமாக தலை வலிக்கும், முதுகு வலிக்கும், தூக்கம் வராது, காரண@ம இல்லாமல் கவலைத் தோன்றும். இப்படிப்பட்ட சிக்கல்களில் இருந்து வெளி வர மிகச் சுலபமான வழிகளைக் காட்டுகிறது இந்த நூல்.அது மட்டுமல்ல சில எதிர்பாரா நிகழ்வுகள் வரும்போது தப்பிக்கும் வழி முறைகளையும் முன்னெச்சரிக்கை சமாச்சாரங்களையும் கூட இந்த நூல் சொல்கிறது. குறிப்பாக திடீரென ஒரு நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள்? அப்பார்ட்மெண்டில் நடக்கும் பயங்கர நிகழ்வுகளிலிருந்து
உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வீர்கள், ஏடிஎம் மில் பணம் எடுக்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பன போன்ற செய்திகளையும் இந்த நூல் பேசுகிறது.