இந்த நூல் இயேசு சொன்ன கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகளைப் படித்து முடிக்கும்போது இயேசுவின் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். இயேசுவின் மனித நேயச் சிந்தனை நம்மை வியப்பிலாழ்த்தும். இயேசுவின் கதை சொல்லும் பாணி நம்மை அசரடிக்கும். இயேசுவின் கதைக்களங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இயேசுவின் கதைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கதைகளைப் படித்து முடித்தபின் நாம் சக மனிதனைப் பார்க்கும் பார்வை மாற்றமடைந்திருக்கும். நாம் சமூகத்தைப் பார்க்கும் பார்வை கூர்மையடைந்திருக்கும். நாம் இறைவனைப் புரிந்து கொள்ளும் பாதை தெளிவடைந்திருக்கும். இவை புனைக் கதைகளின் தொகுப்பல்ல, கடவுளே சொன்ன கதைகளின் தொகுப்பு. வாசியுங்கள், நேசியுங்கள். அன்பின்றி அமையாது உலகு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.