கலைஞர் மு.கருணாநிதி, தோழர் ஜி.ராமகிருஷ்ணன், தோழர் கே.பாலகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன், வல்லிக்கண்ணன், தி.க.சி., டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, நீதியரசர்கள் சந்துரு, அரிபரந்தாமன் முதல் பெ.மணியரசன், ஸ்டாலின் குணசேகரன், பிரின்ஸ் கஜேந்திரபாபு,சந்நியா நடராஜன் வரை சிகரம் செந்தில் நாதன் குறித்து படைப்பாளிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
சட்டம், இலக்கியம், களப்பணி என்ற நோக்கங்களுடன் தன் வாழ்வைத் தொடங்கும் இளைஞர்களுக்கு செந்தில்நாதனின் வாழ்வியல் ஒரு வகுப்பு. இதை வரலாறாக வரைந்திருக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. தன் இலக்கியத் திறனாய்வின் வழியாகவும் வழக்கறிஞர் பணி வாயிலாகவும் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி முதல் பாலச்சந்தர், டி.ராஜேந்தர் வரை குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் செய்த வழக்கறிஞர் செந்தில்நாதனை வாசகர்கள் சார்பாக குறுக்கு விசாரணை செய்தோம். அந்த நெடிய இலக்கிய நேர்காணலும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.