காவியத்தின் தொடக்கம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என அமைதல் வேண்டும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பிரிவுகள் இருக்கவேண்டும். (பரிச்சேதம் எனும் பிரிவு தமிழில் இல்லை) காப்பியப் பொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளும் அமையவேண்டும். இதில் ஒன்றோ பலவோ குறைந்தால் அது பெருங்காப்பியம் ஆகாது. அது சிறு காப்பியம் எனக் கருதப்படும். ஒப்பற்றத் தலைவன் ஒருவன் காப்பியத் தலைவனாக இருக்கவேண்டும்.