book

பிரசாதப் பூக்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரஜினி பெத்து ராஜா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2003
Add to Cart


பூக்கள் என்றவுடன் அவற்றின் மணமும், மென்மையும், வண்ணமும்தான் படைப்பின் அதியற்புதமாய் நம் சிந்தனையை ஸ்பரிசிக்கும். தற்போதைய மனித குலத்திடம் அலசித் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாகத்தான் புனிதம் விளங்குகிறது. ஆனால் பூக்குலமோ புனித வளாகமாய், பரிசுத்தச் செழிப்புடன் உலகெங்கும் மிளிர்கின்றன. பூக்கள் யாவும் தியாக தீபங்கள். எந்தப் பூச்செடியும் தனக்கென பூக்களைப் புஷ்பித்துக் கொள்வதில்லை. அனைத்தும் பிற ஜீவன்களுக்காகவே பறிக்காமல் பூமியில் விழுந்தாலும், பூக்கள் நிலத்திலும் உரமாகச் சேர்கின்றன, தம் மணத்தால் பூமியையும், சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கின்றன.
மந்திரங்களாலும், மாயங்களாலும், தந்திரங்களாலும் சாதிக்க முடியாதவற்றைப் பூக்கள் கொண்டு நன்முறையில் சாதிக்கலாம். எண்ணற்றச் சித்தர்கள் பூக்களின் தெய்வீக ரகசியங்களை நமக்கு நிறையவே அளித்துள்ளனர்.
இவற்றை அகஸ்திய குல தீபிகையான சத்குரு வெங்கடராம சுவாமிகள் திரட்டுப் பால் போல் நமக்குத் திரட்டி அமிர்தப் பொருளாய் ஆக்கி தந்துள்ளார். இவற்றை அறிந்து முறையாகப் பயன்படுத்தி இறையருளை யாவரும் பெற்று உய்க உய்கவே!!