book

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. அரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424996
Out of Stock
Add to Alert List

நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளுதல்" என்னும் செயல், சொத்துடைமை சமூகத்தின் அடிப்படை ஆகும். பொதுவெளியைக் குறிப்பிட்ட தனிநபர்களுக்குரிய வெளியாக மாற்றுவது என்பது இயற்கையை மனிதர்கள் அபகரிக்கத் தொடங்கியதைக் காட்டுவது. பிரித்தானியர்கள் வருகைக்குப் பிறகு, அரச மரபில் இருந்த நிலவுடைமையின் தன்மைகள் பல்வேறு புதிய தன்மைகளை உள்வாங்கு வதாக அமைந்தன.

ஐரோப்பாவில் நிலம் எவ்வகையில், ஆளும் சக்திகளால் நிர்வாகம் செய்யப்பட்டதோ, அந்தத் தன்மையை, புதிதாகத் தங்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இதனை முதன்முதலில் வங்காளத்தில் பிரித்தானியர்கள் தொடங்கினர். பின்னர் பிரித்தானிய, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டித்தனர். பிரித்தானியர் காலத் தொண்டை மண்டலம் அல்லது செங்கற்பட்டு பகுதியில், நிலம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான மூன்று ஆவணங்களின் அடிப்படையில், விரிவான உரையாடலை முன்னெடுப்பது இங்கு நோக்கம்.அந்த ஆவணங்கள் பின்வருமாறு.