book

இனியவை இனியவை இறையன்பு

Iniyavai Iniyavai Iraianbu

₹522.5₹550 (5% off)
எழுத்தாளர் :முனைவர். சுந்தர ஆவுடையப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :490
பதிப்பு :3
Published on :2016
ISBN :9788123415185
Add to Cart

இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகிய அவரது அணுகுமுறைகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. “இனியவை இனியவை இறையன்பு படைப்புகளாம்”

• முதல் இரண்டு வருடங்களுக்குப் பள்ளிக் குழந்தைகளின் மனதில் அன்பு குறித்த பாடங்கள், மனித நேயக் கதைகள், கவிதைகளைப் பதிக்க வேண்டும் என்று இந்நூலில் இறையன்பு எடுத்துரைக்கிறார். • ஆன்மீகம் என்பது அகங்காரம், சுயநலம், பிடிவாதம் ஆகியவற்றை உதிர்ப்பது என்றும் உண்மையும், நேர்மையும் கொண்டது என்றும் அவா் இந்நூலின் மூலம் உணர்த்துகிறார். • அறிவு முதலீடு, உழைப்பு மூலதனம், நம் வியார்வையே நம்மீது தெளிக்கும் பன்னீர் என்று உழைப்பின் மகிமை போற்றப்பட்டுள்ளது. • இந்நூலைப் படிப்போர் வாழ்வில் எதிர்ர்கொள்ளும் நிகழ்வுகள் இனியவை, இனியவையாகவே இருக்கும் என்பது உறுதி. • குழந்தைகளுக்கு வறுமையும் தெரிய வேண்டும் பெற்றோர் படுகிற சிரமமும் தொிய வேண்டும். துயரமும் தொிய வேண்டும். துன்பமும் புரிய வேண்டும், பசியும் அறிய வேண்டும் பிணிக் கொடுமைகளும் உணர வேண்டும். • உழைப்பின் உன்னதமும், வியர்வையின் மகத்துவமும் கூட அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். அதுதான் வெளியே எவற்றைத் தேட வேண்டும், எப்படித் தேட வேண்டும் என்கிற நேர்மையைக் கற்றுத் தரும் சூழலை உண்டாக்கும் என்று கூறியுள்ளார். • திருமணம் என்பது அன்பின் ஆழத்தில் அஸ்திவாரமாக்கப்பட்டால் அது நீடித்துவாழும். இனக் கவர்ச்சியே மையக் கருத்தானால் அது திரிந்து போகும்.