book

திருக்குறள் கட்டுரைகள்

Tirukkural katturaikal

₹560
எழுத்தாளர் :முனைவர் தெ. ஞானசுந்தரம்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :546
பதிப்பு :2
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

திருக்குறள் ஓர் அழியா அறப்பெட்டகம். 'வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். அது கற்பவர் அறிவுக்கு ஏற்பப் புதுப்புதுப் பொருள்களைத் தந்த வண்ணம் இருக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த திருக்குறளைத் தமக்கே உரிய பாணியில் எளிமையும் நேர்ந்தியும் நிறைந்த கட்டுரைகளாக வழங்கி, அதில் முத்தாய்ப்பாக குறளைக் கருத்துகளை ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதற்கேற்ற குறளை கொடுத்திருப்பது படிப்பவரின் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் உள்ளது. திருக்குறளின் அழகே ஈரடிகளில் கருத்துக்களை நேர்த்தியாகச் சொல்வதுதான். இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் அந்த நேர்த்தி அமையப் பெற்றுள்ளது. திருக்குறள் எந்தத் துறைக்கும் ஒரு கருத்துக் கருவூலம். நமது இப்போதைய சமுதாயம் கையில் திருக்குறளாகிய வெண்ணெயை வைத்துக்கொண்டு எல்லாப் பிரச்சனைகளுக்கும் 'கவுன்ஸிலிங்' என்ற பெயரில் நெய்யைத் தேடி அலைகிறது. திருக்குறளிலே பேசப்படாத தலைப்பே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். நாம் எல்லோரும் தமிழனென்று பெருமைப்பட்டுக்கொண்டு நின்றுவிடாமல் குறைந்தது மட்டும் திருக்குறளின் மீது ஈடுபாடு ஏற்படுவதற்குப் பேராசிரியர் அவர்களது இந்நூல் உறுதுணையாகும்.