book

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், சிந்தாமணி
Add to Cart

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு
தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள்  பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்ன வென்றும் இன்னும் திட்டவட்டமாகத் தெரியவரவில்லை.  இந்நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் ஆராய்ச்சியின் முடிவு. அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாழ எல்லாப் பாடல்களும் சிந்தைக்கினியன; பொருள் தெரிதற்கெளியன. இலக்கியச் சுவைஞர்களுக்கு இன்சுவைப் பெட்டகமாகவும், அங்கங்கே கலைகள் தேரும் அறிவர்களுக்கு  அறிவுக் களஞ்சியமாகவும் மரபு சார்ந்த இலக்கியச் சோலைக்குள் அடியெடுத்து வைக்க  விரும்புபவர்களுக்கு ஆரம்ப்ப பயிற்சிப்பனுவலாகவும்  திகழுகிறது. இந்நூலிலுள்ள அநேகம் பாடல்கள் அநேகருக்கு மனப்பாடமாயிருப்பதே இதன் சிறப்புக்குத் தக்க சான்று. படியுங்கள்; பயன்பெருங்கள்; - அன்பன், பத்மதேவன்.