book

காஞ்சி மகானின் கருணை உள்ளம் (பாகம் 2)

Kaanchi Mahaanin Karunai Ullam Paagam 2

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. வேங்கடசாமி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

'காஞ்சிமகானின் வாரிவழங்கும் வள்ளல் தன்மைக்கு ஒரு எல்லையே இல்லை என்பார்கள். தன் முன் நிற்கும் பக்தனின் முகம் பார்த்து அவனது குறையை தீர்த்து வைத்த மகான் அவர். அவரைப்பற்றி நான் ஏற்கனவே நான்கு புத்தகங்கள் எழுதிவிட்டேன். இவ்வளவு தகவல்களையும் என்னால் சேகரிக்க முடிந்தது என்றால் என் இல்லத்தின் அருகாமையில் உள்ள பெரியவா கிரகம் தான் காரணம். அங்கே வரும் பக்தர்கள் தங்களுக்கு அந்த மகான் அருள் பாலித்ததை சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார்கள். ஆதிசங்கரர் சரியான வாரிசாகத்தான் தமிழ் நாட்டிற்கு அளித்திருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டி இருக்கிறது. மகா பெரியவாளை தரிசித்த பக்தர்கள் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள். என்றென்றும் நம்மோடு இருக்கும், ஏன் வாழும் தெய்வம் அவர் என்றால் அது மிகையல்ல. வாருங்கள், ஒருமுறை அவரது திருக்கோவிலை பக்தியுடன் அணுகி முக்தி பெறுங்கள். அவர் மனித உருவில் வந்த சர்வேஸ்வரர்.