ஏன் என்னைக் கொல்கிறீர்கள்
Yen Yennai Kolgireergal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. இராமசாமி
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2013
Add to Cartவாசிப்பின் மற்றொரு பரிணாமமாக இணையமும் வேர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. நல்லதுகளையும், கெட்டதுகளையும் படித்து அறிந்து கொள்வதற்கான ஊடகங்களில் இணையமே இன்று முதலிடம் வகிக்கிறது. வாசிப்பிலிருந்து எழுத்துக்கு எத்தனையோ பேர் இடம்பெயர்கிறார்கள். பலரும் நுனிப்புல் மேய்கிறவர்களாக இருந்தாலும் சிலருக்கு அது கவர்ச்சியாகவும், போதையாகவும் ஆகிவிடுகிறது. எழுத்திலும் வாசிப்பிலும் தன் முனைப்போடு செயல்பட்டுத் தங்களைப் பண்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவராகத்தான் இராமசாமியைப் பார்க்கிறேன். பசியுற்றுத் தவிக்கிற குழந்தைக்கு அழுகுரல்தான் அதன் மொழி, அப்படியான மொழியின் தேடல் க.இராமசாமியின் கவிதைகளில் இருப்பதை இத்தொகுப்பை வாசிப்பதன் மூலம் உணர முடிகிறது. இத்தொகுப்பின் கவிதைகள் சுயம் சார்ந்த மனவெழுச்சிகள், தேடல்கள், வாழ்வின் அவலம் குறித்த கேள்விகள், அக விமர்சனங்களைப் பற்றிப் பேசுகின்றன.