book

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. தனஞ்செயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123418339
Add to Cart

பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.