அந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முழுநிலவன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
Add to Cartபெண்களுக்கு மாதவிடாய் இருப்பதால், அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்றால், பெண் தெய்வங்களே இருக்கின்றனவே. அந்தப் பெண் தெய்வங்களின் நிலைப்பாடு என்ன என்று புத்தியுள்ள எவரும் எழுப்பும் கேள்வியே! பகுத்தறிவு மனிதனுக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக வெடித்தெழும் வினாதான்.அதுவும் ஊடகத்தில் நெறியாளராகப் பணியாற்றக் கூடிய ஒருவர் கேட்டே தீர வேண்டிய ஒன்றே.பெண் தெய்வங்களுக்கு வராத கோபக்கனல் இந்தப் பக்தவாள் கூட்டத்துக்கு ஏன் வருகிறது? இவர்கள் என்ன பெண் தெய்வங்களின் ஓசி வக்கீல்களா?பெண் தெய்வம் இதில் அவமானப் பட்டிருந்தால், பெண் தெய்வத்துக்குச் சக்தியும் இருந்தால், நெறியாளரை நெரி கட்டச் செய்திருக்குமே!அரசனை விஞ்சிய விசுவாசிகளாக சிலர் சிலம்பம் ஆடியதால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றித் தீர வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளான அருமைத் தோழர் கார்த்திகேயன், மிகுந்த பெருந்தன்மையின் உச்சத்திற்குச் சென்று தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளா