வேத விளக்கமே மூவர் தேவாரம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. கமலக்கண்ணன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
இதி) பக்தி என்று கூறப்படுகிறது." - விவேக சூடாமணி 31
ஆதிசங்கரரை அடுத்து மீண்டும் அப்பரடிகள் இவ்வாறு கூறுகிறார்:
தேடிக் கண்டு கொண்டேன்
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை - என்னுளே
தேடிக் கண்டு கொண்டேன். - அப்பர் 4 / திருஅங்கமாலை பண்: சாதாரி - 12
இப்போது நம் முன் நிற்பவர் அவ்வை மூதாட்டி அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்:
உடம்பினைப் பெட்ரா பயனாவ தெல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண் - அவ்வைக் குறள் - 11
மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் உடம்புக்குள்ளே இறைவனைக் காண வேண்டுமா? இதுவரை யாரும் இவ்வாறு கூறவில்லையே என்று திகைத்து நிற்கிறோம்.
இப்போது மீண்டும் ஆதிசங்கரர் தோன்றி வேத விளக்கம் கூறுவதைக் கேட்போம்:
1."எப்படியோ அடைதற்கரிய மனிதப் பிறவியையும் அதிலும் ஆண் பிறவியையும்,
வேதத்தின் உட்கருத்தையும் அறிந்து, எவனொருவன் தன்னுடைய முத்தியின்
பொருட்டு முயற்சி செய்யவில்லையோ அந்த மூடன் ஆத்மாவைக் கொன்றவனாகிறான்.
ஏனெனில் பொய்மையைக் கைக் கொண்டதால், உண்மையாகிய தன்னை அழித்து
விடுகின்றான்" - விவேக சூடாமணி 4
2.இங்கே இவ்வுடலிலேயே சத்துவகுணம் நிறைந்த மனதில் புத்தி குகையில்
(பிரமரந்திரம்) அவ்யாத்ருத ஆதாசத்தில் (நெற்றி நடுநிலையில்) சிறந்த
ஒளியுடன் ஆத்மாவானது நடுப்பகல் சூரியன்போல் தனது ஒளியால் இவ்வுலகனைத்தையும்
பிரகாசிப்பித்துக் கொண்டு விளங்குகின்றது" - விவேக சூடாமணி 132
3.அடக்கப்பட்ட மனத்தால் உன்னிடத்திலேயே நீ, உன்னுடைய ஆத்மாவை இதுதான் நான் என்று புத்தியின் தெளிவால் நேராக அறிவாயாக."
"பிறப்பு இறப்பு ஆகிய அலையுடன் கூடிய பிறவிக்கடலை கடப்பாயாக. பிரம்ம
ரூபத்துடன் நிலைபெற்றவனாய், செய்ய வேண்டியதைச் செய்தவனாய் ஆவாயாக." - விவேக
சூடாமணி 136.
வேதம் காட்டும் வழியில் முத்தி அடைதற்பொருட்டு முயற்சி செய்யாத மனிதர்
அனைவரும் மூடர்களா? தங்களுடைய ஆத்மாவைத் தாங்களே கொன்றவர்களா? ஐயோ, தலை
சுற்றுகிறதே!
மீண்டும் அவ்வை மூதாட்டி வருகிறாரே ! என்ன சொல்லப் போகிறார் என்று கேட்போம்:
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி - 40.
என்னவிந்தை! திருக்குறளும், வேதங்களின் சிகரமான உபநிஷதங்களும்,
அப்பர், சம்பந்தர், சுந்தரர்பாடிய தேவாரமும், பரஞ்சோதி முனிவரின் சிவஞான
போதமும், மாணிக்கவாசகரின் திருக்கோவையார், திருவாசகமும், திருமூலர்
திருமந்திரமும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றனவா?