சரத்சந்திரரின் நகைச்சுவை
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2002
Add to Cartகதை மிகவும் எளிமையானது. காலூ என்ற யானையானது காசிரங்கா காட்டில் நாணல்களைத் தின்று தன்னிச்சையாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்டுக்குள் வழிதவறி வரும் எம்மா என்ற சிறுமியை அது சந்திக்கிறது. எம்மா ஒரு ‘முப்பெருக்கல்’ படத்தை தோழிகளுடன் பார்த்துவிட்டு சற்றே சரஸ் புகைத்து கண்ணயர்ந்தபோது கனவில் சிலலிங்கத்தைக் கண்டதனால் அந்த ஆன்மீக அனுபவத்தின் தாத்பரியத்தை அறியும்பொருட்டு இந்தியா வந்தவள். எம்மாவை காலூ தன் மீது ஏற்றிக் கொண்டு நாணல்காட்டுக்குள் செல்கிறது. அங்கே எம்மா ஒரு குடிசையை நாணலினாலேயே கட்டிக் கொண்டு வாழ்கிறாள். காலூவுக்கும் அவளுக்கும் ஆழமான நட்பு ஒன்று உருவாகிறது. உம்பே என்ற காட்டுப்பன்றி, ஒற்றைக்கொம்புள்ள காண்டாமிருகமான நோஸி, பிராட்டில் என்ற பேருள்ள பச்சைக்கிளி ஆகியோர் ஆகியோர் எம்மாவுக்கு நண்பர்களாக ஆகிறார்கள். லூசியன் என்ற கொடிய ராஜநாகம் எதிரியாக இருக்கிறது. அந்தக்காட்டில் உள்ள ஒரு ஆப்பிள் மரத்தில் இந்த நாகப்பாம்பு வழக்கமாகச் சுற்றிக் கொண்டு கிடந்து எம்மா அந்தப்பக்கமாகப்போகும்போது உஸ் உஸ் என்று ரகசியமாக அழைக்கிறது.