book

கண்ணிலே நீர் எதற்கு?

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

ஓரு கத்திமுனை விஷயத்தைப்பற்றி கூறப்போகிறேன். அழுகையைப்பற்றி. அழுகை என்பது கண்ணீர் சுரப்பிகள் தங்கள் வேலையை சரியாக செய்கின்றன என்பதை காட்டுகிறது. கண்ணீர் சுரக்கவில்லை என்றால் அதற்கு மருந்து சொட்டுகள் விட்டுக்கொள்ள வேண்டும். இப்பொழுது சொல்லப்போவது அதைப்பற்றி அல்ல. நாம் எந்தெந்த சூழ்நிலையிலெல்லாம் அழுகிறோம் என்று பார்ப்போம்.

முதலில் ஆனந்தக்கண்ணீர். இது தன் குழந்தையை மற்றவர் புகழக் கேட்டதும் பெற்றோர் கண்ணில் வழிவது. ஆசிரியர் தன் மாணவனின் சிறப்பைக் கண்டு அழலாம். இதெல்லாம் பெருமிதம், சந்தோஷம் காரணமாக வரும் கண்ணீர். இதற்கு எதிரிடையாய் தன் மகன் குற்றம் புரிந்தவனாக நிற்கும் பொழுது அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் அழுவது. அடுத்தது உணர்ச்சி மேலீட்டால் கண்ணில் நீர் வருவது. உதாரணம், நம் தேசியக் கொடி ஏற்றப்படும் நேரம், நம் நாட்டுக்காக போரில் உயிர் நீத்தவரின் மனைவி குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெறும் நேரம் போன்றவை.