book

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மிர்சா அசதுல்லாகான் காலிப் (1797 - 1869) - இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் புகழ்பெற்றவர். பெரும்பான்மையினரால் விரும்பப்படுகிறவர். நேர்மையும், துணிவும், பரிவுணர்ச்சியும் கொண்ட அவர், அறிவுபூர்வமாகக் களிப்பூட்டும் ஆற்றல் மிக்க மனிதருங்கூட. மற்றவர்களைத் தன்பால் ஈர்த்து அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் உடையவர் அவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் ! முனைப்பாக வெளிப்படுத்துவதோடு உலகின் அழகை நேர்த்தியான முறையில் தெரிவிப்பவை. வேறெந்த உருதுக் கவிஞரை விடவும் ஆழ்ந்த உணர்ச்சியும் வீச்சும் அவரிடம் இருந்தன. காலிப், வாழ்வின் அனைத்துக் கட்டங்களையும் ! பாடியிருக்கிறார். அவர் உலகத்தரமான கவிஞர் என்பதில் ஐயமில்லை . முற்றிலும் புத்தம்புதிய அணுகுமுறை காரணமாகவும் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்.