book

ஏன் பெரியார் மதங்களின் விரோதி?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செய்யாறு தி.தா. நாராயணன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதங்களின் விதிமுறைகள் மக்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தவே என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இக்கால நடைமுறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாட்டுக்கும் சட்டங்களாக இருக்கின்றன.

ஆகவே மதங்கள் தேவை இல்லை என்ற பெரியாரின் சிந்தைனையுடன் பளிச் என்ற தொடக்கம் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பெண்ணியக் கண்ணோட்டத்தில் மதங்களின் தேவை என்பது மேலும் கருத்தாழம் உடைய பகுதியாக அமைந்துள்ளது.

 ஆண்களால், ஆண்களுக்காகச் செய்யப்பட்ட மதக் கோட்பாடுகளில் பெண்களுக்கான நிலை, இரண்டாம் நிலையே . இதற்கு மதங்களில் கூறப்பட்டுள்ளவை, குறிப்பாக மனுநீதியில் சொல்லப்பட்டவை, அதற்கு அடுத்தே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலில் கூறப்பட்டவை பொருத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.