book

கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருகிறது

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. உமா
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

‘இந்திய விடுதலைக்குப் பின் நாட்டில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு எல்லாம் நேருதான் காரணம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை உள்ளிட்ட அனைத்துத் துயரங்களும் நேருவின் சுயநலத்தினால் விளைந்த கேடுகளே. அந்த வகையில், கோட்சே தவறான நபரைக் கொலை செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவைக் கொலை செய்திருக்கலாம்’

        என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

       மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் செயல்படுத்தத் தொடங்கி விட்டன. சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகள், வகுப்புவாதப் பரப்புரைகள், இந்தி - சமற்கிருதத் திணிப்பு, இந்தியா இந்துக்களுக்கே என்னும் முழக்கம் என, தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டிட முயன்று வருகின்றன. நாட்டில் பாரதிய ஜனதா கட்சி என்னும் பதாகையின் கீழ், சங் பரிவாரங்களின் ஆட்சி நடப்பதாகவே தெரிகிறது. நாட்டு நடப்பும் நிலைமை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.