book

தேநீர் இடைவேளை

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

பல மைல்களைக் கடந்து இந்த ஊருக்கு வந்த அனுபவம் மறக்க முடியாததாகிறது. இரவு முழுக்க பேருந்தில் பயணம் செய்துவந்தோம். விடியற்காலையில் இறங்கியதும் அப்பாடா என்றிருந்தது. பரீட்சைகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் மனசு பொங்கி எழும் அப்பாடா என்கிற மாதிரி. ஆனால் மில்லுக்கு வருவதற்கு மறுபடியும் பேருந்து ஏற வேண்டும் என்றார்கள். பேருந்து ஏறின பின்னும் தொடர்ந்தது பயணம், ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது மில். பாறைகளிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட கட்டடம்போல் இருந்தது. அதை சேர்வதற்குள் இன்னொரு இரவு வந்துவிடும்போல் இருந்தது. ஆனாலும் வந்துவிட்டோம் என்றறிந்து இன்னொரு அப்பாடா போட வேண்டியிருந்தது. களைத்துப் போயிருந்தாலும் பேருந்துப் பயணம் மிகவும் பிடித்திருந்தது. நீண்ட பேருந்துப் பயணமே அபூர்வம் என்பதால்.