book

தறிநாடா

₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :237
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424590
Add to Cart

தறிநாடா’ அண்மையில் வெளிவந்த நாவல் (ஆகஸ்டு, 2013) என்றாலும் அது 1970களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. கைத்தறிகளும் விசைத்தறிகளும் அழிந்து, பனியன் கம்பெனிகளால் நிறைந்து, திருப்பூர் பெரும் தொழிற்சாலை நகரமாய் உருமாறி, நொய்யல் ஆற்றைச் சாய ஆறாக மாற்றிய வரலாற்றை ‘சாயத்திரை’ நாவல் சொல்கிறது (முதல் பதிப்பு. 1998). 1990களின் திருப்பூர் நகர வாழ்வு இதில் முதன்மை பெறுகின்றது. ‘நீர்த்துளி’ நாவல் (டிசம்பர் 2011) இருபத்தோராம் நூற்றாண்டுத் திருப்பூர் நகரத்தைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று நாவல்களும் திருப்பூர் நகரத்தின் தொடர்ச்சியான நாற்பது ஆண்டுக்கால வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. திருப்பூர் நகரம், அதன் மரபான நெசவுத் தொழிலை, வளமான இயற்கை எழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு இரையாகி, வாழ்விடமும் தொழிலிடமும் பிரித்தறியமுடியாதபடி பெரும் தொழிற்சாலை நகரமாகி மாசுபட்ட நகரமாக மாறிய வரலாற்றை இந்நாவல்கள் எடுத்துரைக்கின்றன.