book

தன்னை அறியும் தியானம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :பரணி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Bharani Publications
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

கௌதம புத்தர் தன்னை நாடி வந்த பலரின் கேள்விகளுக்கு பதில் தராமல் மௌனமாக இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் புதிதாக வரும் பலருக்கு தியானம் ஏதும் கற்று கொடுக்காமல், சில காலம் வரை மயானத்தில் பிணங்கள் எரிவதை மட்டும் பார்த்து வருமாறு சொன்னாராம்.

ஒருநாள் நிச்சயமாக நாம் இறந்துவிடுவோம் என்பதை ஆழமாக நாம் பார்த்தால், ஆன்மிக ஞானம் என்பது வெகு தொலைவில் இல்லை என்ற காரணத்திற்காக, மயானத்தில் பிணங்களை எரிவதை, கௌதம புத்தர் புதிதாக வந்த சீடர்களைப் பார்த்து வரச் சொன்னார்.

இன்றைய தேதி வரை கௌதம புத்தர் தலைசிறந்த ஒரு ஆன்மிக குருவாக பார்க்கப்படுகிறார்.

ஏனென்றால் கௌதம புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையில் தன் சீடர்கள் பலரை ஞானமடைந்த மனிதர்களாக உருவாக்கினார்.

கௌதமபுத்தர் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல தரப்பட்ட ஞானோதயம் அடைந்தவர்கள், தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணரும் விதமாக ஆன்மிக பயிற்சிகளை செய்ய தான் பெரிதும் பரிந்துரைத்தார்கள்.

எதை தியானம் செய்து தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை எல்லாம் கேள்வி பதில் மூலமாக தெரிந்து கொள்வது என்பது நமக்கு ஆன்மிக முன்னேற்றத்தை தராது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் தியானம் கற்றுக்கொண்ட இடத்தில் கூறுவார்கள், ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்றால் ஆன்மிகம் தொடர்பான தகவல்களை படித்து அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்பார்கள்.