book

நான் பாடும் கீதாஞ்சலி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கீதா
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்ப்பது ​​சிரமமான முயற்சி. தாகூரின் கலைத்துவ உள்ளத்தைக் காண்பது கடினமானது. நான் கூரை மீது நின்று மேரு மலைச் சிகரத்தை எட்டத் துணிந்தேன்.  கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும் போது, எனக்கு அத்தனை இனிமையாக இல்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் வடித்து நான் வாசிக்கும் போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது.  ஆன்மீக வளர்ச்சி பெற்ற இந்திய மொழிகளில் தான் தாகூரின் கீதாஞ்சலி பட்டொளி வீசிப் பறக்கிறது.  தனது வங்க மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல், சில இடங்களில் தாகூரே தடுமாறுவது தெரிகிறது.  சில இடங்களில் என்ன கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்றே தெரிய வில்லை.  எனக்கு வங்க மொழி தெரியாது.  தாகூரின் ஆங்கில மொழி பெயர்ப்பே எனக்கு மூல நூல். தாகூரே தமிழ் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதினால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி, அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா என்று வாசகர்தான் சொல்ல வேண்டும்.