book

தசா புக்தி உண்மை விளக்கம்

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

புத்தி நாதர்களாகிய கிரகங்கள், தசா நாதனுக்கு நட்பும், சமமும் அனால் நற்பலன். பகை கிரகம் அனால் பலன் கெடும்.புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது கேந்திர, திரிகோண, நட்பு ஆட்சி உச்சமாகில், துர்பலன்ங்கள் எல்லாம் நற்பலன் ஆகும்.புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது கேந்திர, திரிகோண, நட்பு ஆட்சி உச்சமாகில், கூட பாபர்கள் புத்தி நாதர்கள் ஆகினால் சமபலன்களையே தருவார்கள்.புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்தால் நற்பலன்கள் எல்லாம் துர்பலன் ஆகும். புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்தால் கூட புத்தி நாதர்கள் சுபர்களாக இருந்தால் நன்மையையும், தீமையும் கலந்த பலன்களை தருவார்கள்.புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்து கூட பாபர்களுடன் கூடியாவது, பார்வையாவது கொண்டிருந்தால் அக்காலத்தில் விசேஷ கெட்ட பலன்களை தருவார்கள்.புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்து கூட சுபருடன் கூடி அல்லது சுபர்கள் பார்வை இருப்பினும் சமபலனை தருவார்கள்.புத்தி கிரகங்கள் இரண்டேழுக்குடையவராயும் அல்லது அங்கு இருந்தும், பகைவர் அல்லது பாபிகள் பார்வையுற்றாலும் தேக அழிவுக்கே காரணமாகும். இவ்வாறு இருந்து சுபருடன் கூடினும் அல்லது சுபர் பார்வையுரினும், அக்காலத்தில் அற்ப வியாதி உண்டாகி நீங்கும்.தசா நாதனும், புத்தி நாதனும் முறையே 1 மற்றும் 6 அல்லது 1 மற்றும் 8 அல்லது 6 அல்லது 8 நிலைகளில் இருந்தால் கெட்ட பலன்களையே தருவார்கள்.