தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்
Thamizhnadu Kuntarkal Sattam
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :84
பதிப்பு :3
Published on :2017
Out of StockAdd to Alert List
குண்டர் என்றால் என்ன? குண்டர் சட்டம் என்றால் என்ன? விளக்கம்: இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 16 அல்லது இயல் 17 அல்லது இயல் 22-இன் கீழுள்ள குற்றங்களை ஒரு நபர் தனியாகவோ அல்லது ஒரு கூட்டத்தின் உறுப்பினராகவோ அல்லது ஒரு குழுவின் தலைவராகவோ இருந்து தொடர்ந்து செய்து வந்தாலோ, அல்லது செய்ய முயற்சித்தாலோ அல்லது அந்தக் குற்றங்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தாலோ, அவர் குண்டர் எனப்படுவார். இயல் 16-இல் உள்ள குற்றங்கள் மனித உயிரைப் பறிக்கும் குற்றங்களாகும். இயல் 17-இல் உள்ள குற்றங்கள் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்களாகும். இயல் 22-இல் உள்ள குற்றங்கள் மிரட்டல், அவமதிப்பு மற்றும் மனஅமைதியைக் குலைக்கும் குற்றங்களாகும். தமிழ்நாட்டில் பொதுவாக ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், கொலை, கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படையினர், அரசியல்வாதிகள் ஆகியோர் பெருவாரியாகக் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். எந்தெந்த குற்றங்களுக்கு, எந்தெந்த விதியின் கீழ், என்னென்ன வழக்குகளுக்கு, என்னென்ன தண்டனை என்பதை இந்தச் சட்டம் புத்தகத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.