தீராநதி நேர்காணல்கள் தொகுதி 2
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2013
Out of StockAdd to Alert List
என்னை ஓர் எழுத்தாளனாக நன்றாகப் புரிந்துகொண்டவர் அருணா. திருமணமாகி
அப்போதுதான் கருவுற்றிருந்தார். ‘வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.
வி.ஆர்.எஸ் கொடுக்கப் போகிறேன்’ என்றேன், அடுத்த நொடியிலேயே ‘உங்கள்
விருப்பம்’ என்றார். அதே ஆண்டுதான் என்று நினைக்கிறேன், எனக்கு ஒரு
முக்கியமான விருது வந்தது. அப்போதே 50,000 மதிப்புள்ள விருது அது. இந்த
ஃப்ளாட் விலையே அப்போது 65,000 தான். அந்த விருது ஒரு மதம் மற்றும் அரசியல்
தொடர்பான விருது. அதை வாங்குவது ஒரு எழுத்தாளனுக்கான அறம் அல்ல என்று
எனக்குத் தோன்றியது. விருது விஷயத்தை அருணாவிடம் சொன்னேன். அருணா கேட்டார்
‘முகத்தப் பாத்தா உங்களுக்கு இந்த விருது வாங்கப் பிடிக்கலை போலயே?’
என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘அப்ப வேணாம்’ என்றார் உடனடியாக. பத்மஸ்ரீ
விருது சமயத்திலும் இதுதான் நடந்தது. துளிகூட நெகட்டிவ் எண்ணம் கிடையாது.
இப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமையவில்லை என்றால் இவ்வளவு எழுத முடியாது. ஷி
இஸ் அன் ஐடியல் உமன்!”