book

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதியார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :454
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123420066
Out of Stock
Add to Alert List

எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.
     தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
      மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.
       பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.