book

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

₹266+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382578482
Add to Cart

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லுபவர்கள் தமிழ் மக்கள். இங்கு கோயில்களுக்குப் பஞ்சமில்லை. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணியும், பெருமையும் பிணிகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் தன்மையும் உண்டு. ஆனால், தங்களுக்குப் பக்கத்திலேயே கோயிலை வைத்துக் கொண்டு தூரத்திலுள்ள கோயில்களைத் தேடிச் செல்வதுதான் நம் பழக்கம். காரணம், நமக்கு நம் ஊர்க் கோயிலின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையும் பாமரர்களாகத்தான் நாம் இன்றும் இருக்கிறோம். திரு. எடையூர் சிவமதி அவர்கள் பல அரிய புத்தகங்களை எழுதியவர். இது அவர் எழுதிய அரிதினும் அரிதான ஓர் புத்தகம். இதில் தமிழகத்தில் உள்ள 56 கோயில்களைப் பற்றிய அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கோயில்கள் இருக்கும் இடம், அதன் தலப் பெருமை, அவற்றைப் பற்றி வழங்கும் பாடல்கள், அதன் பின்னணி, அங்கு சென்றால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம். எந்தெந்த வினைகள் தீரும் என்பதையெல்லாம் மிகவும் விரிவாக இதில் எழுதியுள்ளார் ஆசிரியர். இதைத் தாங்கள் யாவரும் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.