book

மகாகவி பாரதி (நாடகம்)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. லலிதாம்பாள்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2008
Add to Cart

மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கும் தேவனுக்கும் அவர் கவிதைகளில் இடமுண்டு. அவருடைய கவிதைகள் மகா சமுத்திரம் போல் விரிந்தும் ஆழ்ந்தும் கிடப்பவை. அந்தக் கவிதைக் கடலில் மூழ்கிக் கிடைத்ததை கொண்டு வந்து பார்த்தாலும் ஒவ்வொன்றும் ஆணிமுத்தின் தரத்தைக் கொண்டதாக இருக்கும். அத்தகைய கவிதைகளைக் கொண்டு மகாகவி பாரதி என்ற நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாகவியின் கவிதைகள் எளிய நடையில் எழுதப்பட்டு, எளிதில் பொருள் விளங்கும் படியாக அமைந்துள்ளன. அத்தகைய அழகிய  கவிதைகளே பாரதியின் உரையாடல்களாக அமைந்திருப்பதும் மற்றேயோரின் உரையாடல்களிலும் பெரும்பாலும் அவருடைய கவிதைகளின் வரிகளே இடம்பெற்றிருப்பதும் இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். மகாகவியின் கவிதைகளைக் கேட்டு உவட்டாமல் இன்புறவே ஒரு புது முயற்சியான இந்நாடகம் வழி கோலுகின்றது. பாரதியின் கவிதை நயத்தில் மூழ்குவதோடு இசை இன்பத்தையும் துய்க்க விரும்புவோர்க்கு இந்நாடகம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.