book

வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் ப இ‌ராசேந்திரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2007
Out of Stock
Add to Alert List

 போகுமிடம் வெகு தூரமில்லை; நீ வாராய் ‘

எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம். அக்காட்சியில் ஒரு கணவன் தன் மனைவியை மலையின் உச்சிக்கு இப்படிப்பாடி அழைத்துச் செல்வான்.

அவளும் மகிழ்ச்சியுடன் செல்வாள். ஆனால் உச்சியை அடைந்ததும் ‘உன்னை இங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்யத்தான் அழைத்து வந்துள்ளேன் ‘ என்று அக்கனவன் கூறுவான். மனைவி தன் அறிவுத் திறத்தால் கணவனை வலம் வந்து அவனையே தள்ளி விட அவன் இறந்து விடுவான்.

‘மந்திரிகுமாரி ‘ திரைப்படத்தில் வரும் இக்காட்சிக்கான கருவை மு. கருணாநிதி குண்டல கேசியிலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.