book

நக்கீரரின் புறச்சிந்தனைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. ரேணுகாதேவி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிகக் குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகும்

பல்வேறு காலங்களில் வாழ்ந்த, ('நக்கீரர்' என்ற பெயரில் பல தலைமுறைகளாக, பிறந்து வாழ்ந்த) நக்கீரர் பாடல்களைத் தொகுத்து, ஒருவர், 'நக்கீரர்' எனக் கொண்டு, புனையப்பட்ட கதைகள் உண்டு.
பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா ? என்ற கருத்து தொடர்பில், நக்கீரர் மதுரையில் சுந்தரேசுவரருடனேயே (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் என்பது தொன்நம்பிக்கை. இன்றளவும், இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில், நாடகமாக நடத்தப்படுவது குறிக்கத்தக்கது.

மதுரை சொக்க நாதர் (இறையனார்) பாடி , நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட அப்பாடலாவது:

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"