கம்பன் கண்ட தமிழகம் கம்பனுடைய கவிதையின் நயத்தைப்பற்றி ஆராய்வதன்று; அவன்
எடுத்துக் கொண்ட கதையின் தெய்வீகத் தன்மையைப் பற்றி ஆராய்வதன்று. கம்பன்
கவிச் சிறப்பை எடுத்துக்காட்டும் நூல்கள் எத்தனையோ வெளி வந்திருக்கின்றன;
கட்டுரைகள் எவ்வளவோ வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து
கொண்டேயிருக்கின்றன. அதைப்போலவே, இராம சரிதத்தின் சிறப்பைப் பற்றிப்
பேசுவோர்; எழுதுவோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் அந்த
ஆராய்ச்சியிலே இந்நூல் தலையிடவில்லை.
இந்நூல் கம்பன் பாடிய கதைப் பகுதியைப் போற்றுவதும் அன்று;
தூற்றுவதும் அன்று. அந்தப் போற்றல்-தூற்றல் போராட்டம் எப்பொழுதும்
தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்; அது தீராத சண்டை என்றுகூடச் சொல்லி
விடலாம்.
கம்பன் ஒரு உயர்ந்த கவிஞன்; ஒப்பற்ற புலவன்; நாட்டு மக்களின்
கருத்தை ஒட்டி நயமான கவிதை புனைவதிலே வல்லவன்; காலப்போக்கை உணர்ந்தவன்;
மக்கள் மனப் பான்மையை அறிந்தவன்; சான்றோர்களின் கொள்கையைத் தழுவியவன்;
தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறவாதவன்; தமிழ் அன்னைக்குச் சிறந்த
காவியமென்னும் முடி சூட்டியவன்; தமிழ்த் தாயையும், தமிழ்நாட்டையும்
போற்றிப் புகழ்ந்தவன்; தமிழ் மக்கள் தவறான வழிகளிலே சென்று தடுமாறாமல்
உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிறந்த சிந்தை
படைத்தவன்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் கண்ட தமிழகம், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், Thamizharinjar Saami. Sithamparanaar, Aanmeegam, ஆன்மீகம் , Thamizharinjar Saami. Sithamparanaar Aanmeegam, தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் ஆன்மீகம், நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Thamizharinjar Saami. Sithamparanaar books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.