book

திசையெல்லாம் பெருவழி

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. விச்வநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123425368
Add to Cart

தமிழ் இலக்கிய சரித்திரத்திலே ஒரு புதுயுகத்தின் ஆரம்பத்தில் தோன்றியவர் பாரதியார், ஆங்கில இலக்கியத்தின் கூட்டுறவினாலும், தேசியப் பேரியக்கத்தினாலும் இந்தியா முழுவதும் ஒரு புதிய இலக்கிய மறுமலர்ச்சி மண்டியெழுந்த காலத்தில், பாரதியார் நம் நாட்டிலே கவிதைத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு நவீன இலக்கியத்துறைகளிலும், அரசியல் சமூகம் முதலான துறைகளிலும் தம் உள்ளொளியாலும் எழுத்து வன்மையினாலும் வேகத்தினாலும் ஒரு பெருவழி காட்டியிருக்கிறார். இம்மறுமலர்ச்சி யுகத்தை "பாரதியுகம்' என்று சிறப்பித்துப் பேசலாம்.

இவரை நாம் "தேசிய கவி' என்று சிறப்பித்துப் பேசுகிறோம். இத் தேசிய கவி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒருங்கே விடுதலை தேடித் தந்தவர். இவர் பாடல்களை "தேச உபநிஷதம்' என்றும், "அரசியல் கீதை' என்றும் போற்றுகிறோம்.