book

தமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்

₹310+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கன்னியம் முனைவர் அ. சதீஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425054
Add to Cart

தமிழ்ப் பேராசிரியர்களுள் தனது பதிப்புகளாலும், ஆராய்ச்சித் திறனாலும் புலமையுலகில் தனக்கென ஒரு தனித்த இடத்தினை உருவாக்கி கொண்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. தமிழ்ச் செய்யுட்களுக்கு வெறும் பொழிப்புரை மட்டும் எழுதிக்கொண்டு அதையே பெரிய ஆராய்ச்சியாகக் கருதிப் பெருமை பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அறிவியல் முறையைப் பின்பற்றி, திறனாய்வு நோக்கில் இலக்கியங்களைக் கால முறையில் ஆராய்ந்தவர். இவரது இலக்கணப் புலமையில் குறிப்பாக யாப்பிலக்கணப் புலமைத் தமிழிலக்கிய ஆராய்ச்சிற்கு எவ்விதம் பயன்பட்டது என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள் எனப் பல துறை சார்ந்த நூல்களையும் பதிப்பித்துள்ளார். நாமதீப நிகண்டு முதலான ஆறு நிகண்டு நூல்களையும், தொல்காப்பியம் முதலாக நான்கு இலக்கண நூல்களையும், சங்க இலக்கியம் முதலாக ஏழு இலக்கிய நூல்களையும், சாத்தூர் நொண்டி நாடகம் முதலாக மூன்று நாடகங்களையும், இராஜராஜதேவருலா முதலாகப் பதிமூன்று சிற்றிலக்கியங்களையும் இவர் பதிப்பித்துள்ளார். இவருடைய ஒவ்வொரு பதிப்பிலும் நூல் குறித்து, நூலாசிரியரின் காலம், சமயம் குறித்து ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்டுள்ள முன்னுரைகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றன.