book

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. றஜீபன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381969779
Add to Cart

பூக்கள் கல்லறைகளுக்கெனவும்
பூத்துக்குலுங்குகின்றன
அஸ்தம வானங்களில்..

முன்னோக்கி உந்த
வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம்
சிவந்த ஒளிமுன்
சாலையில் துவங்கிய
அலுவலக காலை,
முன்னெப்பொழுதும் போலில்லாது
பேசி தீர்ப்பதற்கென
அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள்
இன்னொரு அவர்களுக்கொன்றும்
புதியதாய் அமைந்துவிடுவதில்லை..

நேற்றைய ஷாலினியின் ரெட் டாப்சும்
இன்றைய கிஷோரின்  புளூ ஜீன்ஸுக்குமாய்
வழக்கத்தை புறந்தள்ளி
சுவாரசியமாய் நகர்கிறது நண்பகல்..

பல பகல்கள்..
இன்னும் தெரிந்திருப்பதில்லை,
சிறுதுளி விஷமொன்றின் காத்திருப்பில்..
மறுதலிக்கப்பட்ட காதல்களும்,
அவைகளுக்குப்பின்னால்
கிஷோரும் ஷாலினியும் போல
பலபெயர்களும் கசிந்து கொண்டேயிருக்குமென!!

பூக்கள்..
கல்லறைகளுக்குமென,
மெல்ல நகர்கிறானொருவன்.