book

ஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வெ. சுந்தரராஜ்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்புக்கு நிகரற்ற வாய்ப்புகள் நமது இந்தியாவில் நிறைந்துள்ளன. நாட்டின் மூன்று பக்கங்களிலுமுள்ள வளமான கடல்கள், கடற் பகுதிகளோடிணைந்த கழிமுகங்கள், உவர்நீர் பரப்புகள், சதுப்பு நிலக்காடுகள், குளங்கள், பாசனக் குளங்கள், சிறிய மற்றும் பெரிய நீர்தேக்கங்களென அமைந்துள்ள நீர்வள வாய்ப்புகள் நிகரற்றவை; சிறப்பானவை. கடல்கள், உவர்நீர்ப்பரப்புகள் மற்றும் நன்னீர்ப் பரப்புகள் என்ற மூன்று வகைகளில் அடங்கும் நீர்வளங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் மதிப்பு மிக்கவை; தவிர்க்க முடியாதவை; எப்போதும் தப்பாது போற்றிப் பாதுகாக்க வேண்டியவை. இவை அனைத்திலும் வாழவும், வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற வகை வகையான மீனினங்கள், வெகுவாக இருக்கின்றன. இவற்றின் பல்லுயிர் வளம் (Biodiversity) நமது மீன் வளத்திற்கு அத்தாட்சி.