மனித வாழ்விற்கு மனநிலையே அனைத்திற்கும் அடிப்படை. மண்ணும், மனமும் ஒன்றே.
மண் நஞ்சை, புஞ்சை என பிரிக்கப்படுகிறது. மனம், நேர்மறை, எதிர்மறை என
பார்க்கப்படுகிறது. நேர்மறை, எதிர்மறையை பொறுத்துத்தான், வாழ்வில் அத்தனை
விஷயங்களும் நடக்கின்றன. ஒருவர் ஒரு ரோஜா செடியை பார்த்து, “பூ அழகாக
உள்ளதே!” என பார்ப்பது நேர்மறை. மாறாக “முட்களாக உள்ளதே” என நினைப்பது
எதிர்மறை.நேர்மறை மனநிலை மகிழ்ச்சியின் உறைவிடம். மனித மனம் என்னவென்று
தெளிவாக அறிந்து கொண்டால், நமக்கு தேவைப்படும் மகிழ்ச்சியின் அனைத்து
ரகசியங்களும் தெரிந்து போகும். வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
மிக முக்கியமானது மனநிலையே.