எங்களின் அடுத்தக் கதையான "விண்ணைத் தாண்டி வருவாயா?" மூலம் அன்பான வாசக நெஞ்சங்களை மீண்டும் சந்திப்பதில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி. பொய்யே கூறாவிடினும் சந்தர்ப்பவசத்தால் உண்மை மறைக்கப்படும் பொழுது அதில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வு எவ்வாறு பிரச்சனைக்கு உள்ளாகிறது? அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாயகனும், நாயகியும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் இந்தக் கதை. கதையைப் படித்து கருத்துக்களைத் தெரிவித்து உற்சாகப்படுத்தும் அத்தனை உள்ளங்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்!