"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. " என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப இன்று பணம் என்பது இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகிவிட்டது. பணம் இல்லாதவருக்குப் பல வகைகளில் துன்பம் என்றால் பணம் படைத்தவருக்கு வேறு வகைகளில் கஷ்டம். உயிரற்ற, உணர்வற்ற பணம் உலகை மட்டுமில்லை... மனிதர்களின் உள்ளங்களையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்டதாய் மாறிக் கொண்டிருக்கிறது. நாயகன் கிருஷ்ணனுக்கும், நாயகி காவ்யாவிற்கும் இடையில் எழும் காதலுக்கு பணம் முட்டுக் கட்டையாய் அமையுமா அல்லது அவர்களது காதலின் வலிமை புற காரணிகளைத் தாண்டி வெல்லுமா என்பதற்கான விடையை 'அலைபாயுதே கண்ணா' மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.