சுட்டும் விழிச்சுடரே கதை நகைச்சுவை பாணியில் கொடுக்கலாம் என்ற முயற்சி எடுத்திருக்கிறோம். நகைச்சுவை என்று சொல்லியபிறகு கதையின் களத்தை நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் கல்லூரி.
கல்லூரி வாழ்க்கை தான் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காலம் என்றாலும் அந்த காலத்தில் தான் இளமைக் கால கொண்டாட்டங்கள் அனைத்தையும் நண்பர்களுடன் சந்தோஷமாக அனுபவிப்போம். இந்த கதையில் வரும் சில சம்பவங்கள் நம்மில் பலருக்கு கல்லூரியில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்போகலாம். சிலருக்கு நம் கல்லூரியில் இந்த மாதிரி இல்லாமல் 'மிலிட்டரி ஸ்கூல்' நடத்தினார்களே... இதெல்லாம் சினிமாவிலும், மற்ற கதையிலும் வரும் கல்லூரி போல என்று சலிப்பு கூட வரலாம்.