கவியரசரின் படைப்புகள் அடங்கிய இத்தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள
செண்பகத்தம்மன் கதை ஒரு மனிதன் எவ்வளவுதான் ஒழுக்கமானவனாக இருந்தாலும்,
யோக்யவானாக இருந்தாலும், அவன் செய்கிற தொழில் சமுதாயம் வெறுக்கிற
இழிதொழிலாக இருக்குமானால் அவனது குடும்பமும் தவறான கண்ணோட்டத்தோடுதான்
பார்க்கப்படும் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களையும்
விளக்குகிறது. இரண்டாவதாக இடம் பெற்றுள்ள காதல் பலவிதம் கவியரசர் தன்
வாழ்நாளில் கண்டும் கேட்டும் அறிந்த உண்மைக் காதல் கதைகளின் தொகுப்பு.
புதின நடையில் அமைந்திருப்பதாலேயே அவற்றை இத் தொகுப்பில் சேர்க்க
முடிவு செய்தேன். அத்துடன், கவியரசரின் இதயம் கவர்ந்த பழைய
இலக்கியங்களிலிருந்து சில காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.