சுப்பிரமணிய பிள்ளை. கா (1888-1945) திருநெல்வேலியில் காந்திமதநாத பிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவர்தாம் அவ்வூரில் தம் குலத்தில் முதன் முதலாக பி.ஏ. பட்டம் பெற்றவர். அதனால், அவர் பி.ஏ. பிள்ளை என்று அழைப்பபெற்றார். அவருடைய மனைவி மீனாட்சியம்மையார். இவர்களுடைய மகானாக கா. சுப்பிரமணியபிள்ளை. 5-11-1888 இல் பிறந்தார். இவர்தாம் நமது குலத்தில் எம்.எல்.பட்டத்தினை முதன் முதலாகப் பெற்றவர். அதனால் இவர் எம்.எல். பிள்ளை என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் பெறுவாராயினார்.