இந்து
சமயம் என்பது ஒரு தனிப்பட்ட நெறியன்று என்றும், இம்மண்ணில் வழங்கப்பட்ட
அனைத்துச் சமயங்களின் கூட்டு நெறி யென்றும் விளக்க முனைந்துள்ளது.
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு என்னும் இந்நூல். குறிப்பாகச்
சைவம், வைணவம், சுமார்த்தம் என்னும் மூன்றினையும் சுருக்கமாக எடுத்தோதுவது
இதன் நோக்கமாக உள்ளது. சைவத்திற்கும் சுமார்த்தத்திற்கும் உள்ள
வேறுபாடுகள் தெளிவுப்படுத்தப்பட்டுச் சைவர்கள் தமது நெறியை உணர்ந்து
அறிந்து போற்றிட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் இந்நுல் மலர்ந்துள்ளது
எனலாம்.
சைவப் பெருமக்கள் தங்கள் கொள்கைகளைத் தெளிவாகப் புரிந்து
கொள்ள வேண்டுமெனவும், சைவ ஆகம நெறிகளுக்கு மாறாக நடைபெறும் வழிபாடுகளைத்
தவிர்க்க வேண்டும் என்னும் உயர்நோக்கத்திலும் இந்நூல் அமைந்துள்ளது.
ஆசிரியர் சிறந்த சைவப் பற்றாளரான கா. சுப்பிரமணிய பிள்ளை
தனது அனுபவத்தாலும், நுண்மாண் நுழைபுலத்தாலும் நேரிய முறையில் ஆய்வு செய்து
சைவ நன்னெறிகளை இதன்கண் தெளிவுபடுத்தியுள்ளார்.