உண்மையான இலக்கிய வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை, அதன் இலக்கியங்களைக் கொண்டு, அதன் இலக்கியங்களின் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக்கூறுவதாகும். இலக்கிய வரலாறு என்னும் தொடரை நாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையாவகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்