இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் பெரும்பாலோர் மெய்யான மாதிரி முன்னோடிகளாவர். பிரதான பாத்திரமான பாவெல் கர்சாக்கின் கதி இந்த நூலாசிரியரின் வாழ்க்கையே திரும்பக் கூறுகிறது. நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் (1904- 1936) குறுகிய ஆனால் வீரஞ்செறிந்த வாழ்க்கை வாழ்ந்தார். உள்நாட்டுப் போரில் கடுமையான காயமுற்ற அவர் இருபதாவது வயதிலேயே கண்பார்வை இன்றி நிரந்தரமாகத் தேகத்திடம் இழந்தவராய் ஆகி விட்டார். அப்போதுதான் இளமை,காதல் மற்றும் போராட்டம் பற்றிய இந்த அற்புதமான நூலை, இருபதாமாண்டுகளின் தமது இளங்கம்யூனிஸ்டுகள் பற்றிய இந்த நூல் எழுதினார்."வீரம் விளைந்தது" எனும் இந்த நூலின் படைப்பு மாபெரும் மானுட தீரச் செயல். அது உலக முற்றுமுள்ள இளைஞர்க்ள் விரும்பும் ஜனரஞ்சக நாவல்