நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - தமிழ்ப் பழமொழி; நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் திருவருட்பா. ' நோயற்ற வாழ்வு ' வாழ்வு என்பது எளிதல்ல - மிகவும் தூய தண்ணீர், மாறுபாடில்லாத உணவு முறை, தூய சுற்றுச் சூழல் ஒத்தது அறிந்து உயிர் வாழ்கின்ற சமுதாய அமைப்பும், மக்கள் நலமே மன்னுயிர் நலமாக பேணுகின்ற அரசியல் அமைப்பும் வேண்டும். இவைகள் அனைத்தையும் இந்நாட்டு மக்கள் ஒழுங்காகப் பெற்று வாழும் நாளே நல்ல நாளாகும்.