மாசிடோனியாவின் ஆட்சிப் பீடத்தை கி.மு. 359 - ல் ஏற்ற நாளிலிருந்தே பிலிப்பின் புகழ் வளரத் தொடங்கியது; அதை விடவும் மாசிடோனியா மாபெரும் சிறப்பை அடைய ஆரம்பித்தது என்று கூறலாம். ''ஏறுமுகம்'' என்பார்களே, அதைப்போல மாவீரன் பிலிப்புக்கு ஏறுமுகம் தான் ஆரம்பித்து விட்டது. அவன் தொட்டதொல்லாம் துலங்கியது. மாசிடோனி யாவின் வளர்ச்சி உண்மையில் பெருமைக்குரியதாகயிருந்தது. காரணம் அந்த மாவீரனாம் பிலிப்பின் அஞ்சாமை தான் எல்லாம். எதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த அவன் நாட்டின் எல்லைப் பரப்பை மேலும் வளர்த்து வருவதிலேயே கண்ணாகயிருந்தான்.