இன்றைய தகவல் – தொழில்நுட்பமும் சமூக வலைத்தளங்களும் இல்லாத காலத்தில், ஒவ்வொரு நாளும் தனது இயக்கத் தொண்டர்களுடன் உரையாடுவதற்கான ஊடகமாக உடன்பிறப்புக் கடிதங்களைத் தலைவர் கலைஞர் மிகச் சிறப்பாகக் கையாண்டார். அந்தக் கடிதங்களை முழுமையான தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அந்த எண்ணத்தை முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.